நாம் நமது அன்றாட வாழ்வில் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீர் அருந்துவது வழக்கம். தேநீருடன் சாப்பிடுவதற்கு நாம் கடைகளில் உணவுகளை வாங்குகிறோம். அவ்வாறு வாங்குவதை விட நாமே சத்துள்ள உணவுகளை செய்து சாப்பிடுவது சிறந்தது.
தற்போது இந்த பதிவில் குழந்தைகளுக்கு பிடித்தமான வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் வாழைப்பூவை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடலை பருப்பினை மிளகாயுடன் சேர்த்து ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து ஊற வைத்ததை வடித்து எடுத்து, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வெங்காயத்தினை பொடியாக நறுக்கி அரைத்த மாவுடன் போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை சிறிய, சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் நன்றாக மொறுமொறுப்பாக பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான வாழைப்பூ வடை தயார்.
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில்…