லைஃப்ஸ்டைல்

Food : என்னது.. வீட்டிலேயே சாம்பார் பொடி செய்யலாமா..? அது எப்படிங்க…?

Published by
லீனா

நமது வீடுகளில் நாம் அடிக்கடி சாம்பார் வைப்பது வழக்கம். சாம்பாருக்கு பருப்பு, காய்கறிகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சாம்பார் மசாலாவும் முக்கியமானது. இந்த மசாலாவை நாம் கடைகளில் தான் வாங்குவதுண்டு. ஆனால், நாம் இந்த மசாலாவை கடைகளில் விலைகொடுத்து வாங்குவதை விட, வீட்டிலேயே சுத்தமாக சுவையாக தயார் செய்யலாம்.

தற்போது இந்த பதிவில் வீட்டிலேயே சாம்பார் மசாலா போடி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
  • கடலை பருப்பு – 1 ஸ்பூன்
  • மல்லி – 2 ஸ்பூன்
  • சீரகம் – அரை ஸ்பூன்
  • மிளகு – 1 ஸ்பூன்
  • வெந்தயம் – 1 ஸ்பூன்
  • அரிசி – 2 ஸ்பூன்
  • வர மிளகாய் – 11
  • பெருங்காய கட்டி – சிறிய துண்டு
  • கருவேப்பிலை – 5 கொத்து
  • தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்
  • மஞ்சள் போடி – அரை ஸ்பூன்

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அடுப்பில் கடாயை வைத்து, கடாய் சூடான பின்பு அதில் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். மல்லியையும் தனியாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு சீரகம், மிளகு, வெந்தயம் மூன்றையும் சேர்த்து தனியாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அரிசியை போட்டு அந்த அரிசி பொன்னிறமாக வரும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் வரமிளகாய் பெருங்காயகட்டி கருவேப்பிலை மூன்றையும் போட்டு சிறிதளவு வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல் தேங்காய் துருவலையும் பொன்னிறமாக வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது வறுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் அரைத்து வைத்துள்ள இந்த சாம்பார் பொடியை ஒரு பாட்டில் கொட்டி நமக்கு தேவைப்படும் போது உபயோகித்துக் கொள்ளலாம். கடைகளில் நாம் சாம்பார் பொடி வாங்கி பயன்படுத்துவதை விட இந்த சாம்பார் பொடியை நம் வீடுகளில் செய்வது மிகவும் மணமாகவும், சுவையாகவும் சுகாதாரமாகவும்இருக்கும்.

Published by
லீனா
Tags: FoodSambar

Recent Posts

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

55 minutes ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

5 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

12 hours ago