வெயில் காலத்தில் தலைவலியா..? கவலையை விடுங்க… இந்த ‘தர்பூசணி’ ஜூஸை குடியுங்கள்..!!

Published by
பால முருகன்

கோடைக்காலம் தொடங்கிவிட்டால் மக்கள் வெளியே வெயிலில் செல்ல சற்று அச்சபடுகிறார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கும். கடந்த சில நாட்களாகவே வெப்ப நிலை இயல்பை விட அதிகரித்து வருகிறது.

Watermelon juice [Image source : wallpaperflare]

மேலும், வெயிலின் தாக்கம் காரணமாக தலைவலி போன்றவற்றை பிரச்சனைகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். நீரிழப்பு என்பது தலைவலிக்கு ஒரு பொதுவான காரணமாகும், எனவே தண்ணீர் குடிப்பது அல்லது தர்பூசணி போன்ற நீர் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நீரிழப்பு காரணமாக ஏற்படும் தலைவலியைத் தடுக்க அல்லது குறைக்க உதவும்.

watermelon juice [Image source : pinterest]

தர்பூசணியில் அமினோ அமிலம் சிட்ருலின் உள்ளது, இது இரத்த நாளங்களைத் தளர்த்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது, தலைவலியை குறைக்க உதவுகிறது. தர்பூசணி சாறு அனைத்து வகையான தலைவலிகளுக்கும் மருந்தாக இல்லாவிட்டாலும், இது நிச்சயமாக ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் நீரேற்றம் செய்யும் சிற்றுண்டியாக இருக்கலாம் என உணவியல் நிபுணர் ஃபௌசியா அன்சாரி தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார்.

தர்பூசணியின் சத்துக்கள்

  • 90 சதவீதம் தண்ணீர் சத்து நிறைந்துள்ளது.
  • ஒவ்வொரு பானத்திலும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி6 உள்ளது.
  • அமினோ அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் லைபோசீன் ஆகியவை ஏராளமாக உள்ளது.
  • பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது.
  • இதில் உப்பு மற்றும் கலோரிகள் குறைவு.

வெயில் காலத்தில் தர்பூசணி ஜூஸ் 

watermelon juice [Image source : pinterest]

இந்த வெயில் காலத்தில் தலைவலி ஏற்பட்டால் கவலையை விட்டுவிட்டு தர்பூசணி வாங்கி அதனை ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம் தலைவலியை குறைத்துகொள்ளலாம். தர்பூசணி சாறு ஒருவரை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் சருமத்தை நீரேற்றமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

29 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

59 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

2 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

10 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago