நமது அன்றாட வகையில் நாம் பல வகையான நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறோம்.மேலும் உணவில் நாம் சத்தான உணவிற்கு பதிலாக நாம் பாஸ்ட் புட் உணவுவகைகளையே தேடி தேடி உண்ணுகிறோம்.
இந்நிலையில் பாதாம் நமது உடலுக்கு தேவையான பல வகையான சத்துக்களை கொண்டுள்ளது.அதனை நாம் உணவில் சேர்த்து வந்தால் பல வகையான சத்துக்களும் நமக்கு கிடைக்கும். மேலும் பாதாமில் கால்சியம் ,பொட்டாசியம்,நார்சத்து,மெக்னீசியம்,பாஸ்பரஸ் ,வைட்டமின் இ முதலிய சத்துக்களை கொண்டுள்ளது. பாதாமில் இருக்கும் அறிய மருத்துவ குணங்களை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
பாதாம் மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவி புரியும்.பாதாமில் இருக்கும் பல வகையான சத்துக்கள் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் பேருதவி புரியும்.
தினமும் காலையில் 4 பாதாமை நீரில் ஊற வைத்து வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வருவது மிகவும் நல்லது.
பாதாமை நாம் தினமும் உணவில் எடுத்து வந்தால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.மேலும் பாதாமில் புரதம் ,பொட்டாசியம் மற்றும் பல் நல்ல கொழுப்பு பல சத்துக்கள் இதயத்தை பாதுகாக்க உதவும்.வைட்டமின் இ மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
பாதாமில் இருக்கும் நார்சத்து மலச்சிக்கலை தீர்க்கும்.மலசிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் பாதாமை சாப்பிட்டு விட்டு தண்ணீரை குடித்து வந்தால் மலசிக்கல் பிரச்சனை தீர்க்கும்.
பாதாம் நமது உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளை அகற்ற உதவுகிறது.
பாதாமை நாம் தினமும் சாப்பிட்டு வர நமது பெருங்குடலில் உணவுகளை போவதை சீராக்கி தேவையற்ற கழிவுகள் சேர்வதை தடுக்கிறது.
பாதாமை நாம் தினமும் உணவில் சேர்த்து வருவதால் நமது உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
பாதாமை நாம் தினமும் உணவில் சேர்த்து வந்தால் அது நமது முகத்தில் ஏற்படும் வறட்சி, முகப்பரு, கருமை, கரும்புள்ளிகள் முதலிய பிரச்சனைகளை தீர்க்கிறது.
பாதாமை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் அது நமது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…