அடேங்கப்பா.! தர்பூசணியில் இவ்வளவு நன்மைகளா?

Published by
K Palaniammal

Watermelon-தர்பூசணியின் நன்மைகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்பதை பற்றி இப்பதிவில் காண்போம்.

கோடை காலத்தில் நம் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து பற்றாக்குறையை போக்க தர்பூசணியே போதுமானது.

தர்பூசணியின் நன்மைகள்:

  • தர்பூசணியில் அதிக அளவு லைகோபீன்  உள்ளது. இந்த லைகோபீன்  தான் பழங்களின் சிவப்பு நிறத்திற்கு காரணமாய் இருக்கிறது. மற்ற பழங்களை விட தர்பூசணியில் அதிகம் உள்ளது. இது கண் பார்வையை கூர்மை பெற செய்வதோடு எலும்புகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது.
  • குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் ஏற்படும் வேர்க்குரு ஏற்படாமல் தடுக்கிறது.
  • உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு நீர் சத்தும் ,நார்ச்சத்தும் மிக அவசியம். அதற்கு தர்பூசணியே போதும், இதில் அதிக அளவு நீர் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.
  • இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்.
  • விட்டமின் பி6 அதிகம் உள்ளது .இது  நம் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
  • விட்டமின் சி சத்தும் அதிகம் இருப்பதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை  தடுக்கிறது.
  • இதில் உள்ள விதை பகுதிகளையும் கடித்து சாப்பிடுவதால்  உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம் .

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள் ஒரு சிறிய துண்டாக எடுத்துக் கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும் ஜூஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

தர்பூசணியை அதிகம் எடுத்துக் கொண்டால் ஏற்படும் பாதிப்புகள்:

தர்பூசணியை அதிகம் எடுத்துக் கொண்டால் கல்லீரல் பாதிப்பு மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும். அதனால் ஒரு நாள் ஒன்றுக்கு 150 கிராம் அளவு எடுத்துக்கொள்வது போதுமானது.

பழங்களைத் தேர்வு செய்யும் முறை:

  • தர்பூசணி விளைச்சலின் போது நைட்ரேட் அதிகம் பயன்படுத்தப்படுகிறது, இது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. அதனால் பழங்களை நாம் வாங்கும் போது பார்த்து வாங்க வேண்டும்.
  • பழத்தின்  நடுப்பகுதி வெள்ளையாகவும் பள்ளமாகவும் இருந்தால் அதை தவிர்க்க வேண்டும்.
  • தர்பூசணியின் தோளில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வெள்ளை நிறம் இருப்பது மற்றும் அதன் காம்பு பச்சையாக இருந்தால் அதில் இனிப்பு சுவை குறைவாக இருக்கும் .
  • மேலும் பழத்தின் காம்புகள் காய்ந்து இருந்தால் இனிப்பு சுவையோடு இருக்கும்.அது நன்கு பழுத்த பழமாகும் .

எனவே இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், உடலில் நீர் சத்தை தக்க வைத்துக் கொள்ளவும் தர்பூசணியை எடுத்துக்கொள்வோம்.

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

7 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

7 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

9 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

10 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

10 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

10 hours ago