உங்களுக்கு தைராயிடு பிரச்சனை உள்ளதா? இப்பிரச்சனை பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத உண்மைகள் இதோ!

Published by
லீனா

தைராயிடு பிரச்னை பற்றி நாம் இதுவரை அறிந்திராத உண்மைகள்.

தைராயிடு என்பது கழுத்து பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி ஆகும். இந்த சுரப்பி உடலில் பல முக்கியமான பணிகளை செய்கிறது. ஆனால், தற்போதுள்ள நாகரீகமான சமூகத்தில், மோசமான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால், தைராயிடு பிரச்சனை இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படுகிறது.

நமது உடலில் தைராயிடு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தைராயிடு சுரப்பியில் இரு விதமான பிரச்சனைகள் வரக்க்கூடும். அவை ஹைப்பர் தைராயிடு மற்றும் ஹைப்போ தைராயிடு.

தைராயிடு பிரச்சனை யாருக்கு வரும்

கர்ப்பிணி பெண்கள், கர்ப்பகாலத்தில் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படலாம். இப்பிரச்சனை பரம்பரை வழியாகவும் வரலாம். பொதுவாக இந்த பிரச்னை பெண்களுக்கு தான் அதிகமாக காணப்படும்.

ஹைப்பர் தைராயிடு

ஹைப்பர் தைராயிடு என்பது, தைராயிடு சுரப்பியில் அளவுக்கு அதிகமாக தைராயிடு ஹார்மோன்கள் சுரப்பது ஆகும். தற்போது இதற்கான அறிகுறிகள் பற்றி பார்ப்போம்.

அறிகுறிகள் 

  • அதிகமான வியர்வை.
  • அடிக்கடி தும்மல் வருதல்
  • நினைவாற்றலில் ஏற்படும் பிரச்னை.
  • எதிலும் முழுமையான கவனம் செலுத்த இயலாத நிலை.
  • குடலியக்கத்தில் ஏற்படும் மோசமான நிலை.
  • உடலில் ஏற்படும் படபடப்பு.
  • அதிகமான மனஅழுத்தம்.
  • எடை குறைந்து காணப்படுதல்.
  • மாதவியின் ஏற்படும் பிரச்சனை.
  • உடலில் ஏற்படும் அதிகமான சோர்வு.

ஹைப்போ தைராயிடு

ஹைப்போ தைராயிடு என்பது தைராயிடு சுரப்பியின் மோசமான செயல்பாட்டால், போதிய அளவு தைராயிடு ஹார்மோன் சுரக்கப்படாத நிலை ஆகும். இதற்கான அறிகுறிகள் பற்றி பார்ப்போம்.

அறிகுறிகள் 

  • நகங்களில் வெடிப்பு ஏற்படுதல்.
  • கழுத்தின் முன் பகுதியில் ஏற்படும் வீக்கம்.
  • அதிகப்படியான களைப்பு.
  • நினைவாற்றலில் ஏற்படும் பிரச்னை.
  • சருமம் மற்றும் தலைமுடியில் காணப்படக் கூடிய வறட்சியான நிலை.
  • மனதளவில் காணப்படும் இறுக்கம்.
  • உடல் பருமன் மற்றும் தசை பிடிப்புகள்.
  • மலசிக்கல் பிரச்னை
  • மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய சீரற்ற இரத்த போக்கு.
Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

3 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

4 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago