இன்றைய இளம் தலைமுறையினர் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் முடி உதிர்வும் ஒன்று. இந்த பிரச்சனையில் ஆண் மற்றும் பெண் என இருபாலரும் பாதிக்க படுகிறார்கள்.
இதனை இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி முடி உதிர்வு பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
கேரட்டை எடுத்து அவித்து நன்கு மசித்து வேகவைத்த நீரில் குழைத்து தலைமுடியில் தேய்த்து அரை மணிநேரம் கழித்து குளித்து வந்தால் முடி வளர்ச்சி அடைவதுடன் முடிஉதிர்வது தடை படும்.
கேரட் மற்றும் 4 பப்பாளி பழ துண்டுகளை நறுக்கி மிக்சியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.அதனுடன் யோகர்ட் சேர்த்து 15 நிமிடங்கள் தலையில் ஊற வைத்து பின்பு தலைமுடியை நன்கு அலசவும். இவ்வாறு செய்தால் முடி வளர்ச்சி அடைவதுடன் முடி உதிர்வது குறையும்.
வெங்காயத்தை நன்கு அரைத்து அதில் தேன்கலந்து தலைமுடியில் பூசி அரைமணிநேரம் கழித்து குளித்து வந்தால் வெங்காயம் முடிக்கு தேவையான ஊட்ட சத்துக்களை அளிப்பதுடன் முடி உதிர்வை குறைத்து முடி வளர்ச்சியை தூண்டும்.
1 கேரட் மற்றும் ஒரு வெங்காயம் எடுத்து நன்கு அரைத்து கொள்ளவும்.பின்பு 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து முடியில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து குளித்து வர முடி உதிர்வது தடைபடும்.
பூண்டு சாறினை தலைமுடியில் நன்கு படும் படி தேய்த்து அரை மணி ஊற வைத்து நேரம் குளித்து வர முடி நன்கு வளரும்.முடி உதிர்வு தடை படும்.
உருளைக்கிழங்கினை தோல் சீவி தூவி சாறு எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன்,முட்டை வெள்ளைக்கரு மற்றும் சிறிதளவு தண்ணீர் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வர முடிஉதிராமல் இருப்பதுடன் முடி வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். இது முடிக்கு பல விதமான ஊட்ட சத்துக்களையும் கொடுக்கும்.
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…