இரவில் கீரையை ஏன் சாப்பிடக்கூடாது தெரியுமா? அப்போ இந்த பதிவை படிங்க..!

Published by
K Palaniammal

கீரை வகைகளை நாம் அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் மருத்துவரை அணுக வேண்டி இருக்காது. ஆனால் அதுவே இரவில் எடுத்துக் கொண்டால் மருத்துவரை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே இரவில் ஏன் கீரை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கீரையை எப்படி சாப்பிட வேண்டும் , எதனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பது பற்றி  இப்பதிவில் பார்ப்போம் .

இதனால் தான் இரவில் கீரை சாப்பிட கூடாதா ?

கீரையில் நிறைய வகைகள் உள்ளது. இதில் அதிக அளவு தாது சத்துக்களும், விட்டமின் சத்துக்களும், நுண் சத்துக்களும் நிறைந்துள்ளது. கீரைகளை தினமும் ஒரு வேலையாவது எடுத்துக் கொள்வது அவசியமானது. இவ்வாறு நாம் எடுத்துக் கொண்டால் பல நோய்கள் நம்மை அணுகாமல் பார்த்துக் கொள்ளலாம். குறைந்தபட்சம் வாரம் இரண்டு நாட்கள் ஆவது கீரைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சையம் கீரையில் அதிகம் உள்ளது அதுபோல் நார் சத்தும் அதிகம் உள்ளது. இந்த நார்ச்சத்து செரிமானம் ஆக சூரிய ஒளி தேவைப்படுகிறது, இதனால்தான் காலை அல்லது மதிய வேலைகளில் கீரை பரிந்துரைக்கப்படுகிறது. இரவில் எடுத்துக் கொண்டால் செரிமான கோளாறு ஏற்படும் அதன் பலனை முழுமையாக பெற முடியாது.

கீரையுடன் சேர்க்க கூடாத உணவுகள்

பொதுவாக கீரை சமைக்கும்போது தற்போதைய காலகட்டத்தில் பால் சேர்த்து சிலர் செய்கிறார்கள் அவ்வாறு செய்வதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தயிருடன் கீரை சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால் பல பெயர் தெரியாத தோல் வியாதிகள் வர வாய்ப்புள்ளது.

கீரை சாப்பிடும் முறை

காலை வேலைகளில் பொறியல்  அல்லது கடையல் போன்று சாப்பிடலாம். மதிய நேரத்திற்கு மேல் சென்று விட்டால் சூப்பாக எடுத்துக் கொள்வது சிறந்தது. டெல்டா பகுதிகளில் கீரையை கழனி தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைப்பார்கள் . தேங்காய் பால் சேர்த்ததற்கு பிறகு கொதிக்க வைக்க கூடாது. கொதிக்க விடாமல் இறக்கி சாப்பிடலாம். மாலை 5 மணி வரை கீரை சூப் எடுத்துக் கொள்ளலாம் அதற்கு மேல் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

எனவே காலை வேளையில் இட்லி தோசைக்கு பதில் கீரையை எடுத்துக் கொண்டால் இதன் முழு சத்தும் நம் உடல் உறிஞ்சிக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…

17 seconds ago

அரோகரா.. அரோகரா.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது மகா கும்பாபிஷேகம்..!

தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…

22 minutes ago

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

13 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

13 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

15 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

15 hours ago