kitchen [Imagesource : Representative]
ஒரு பெண்ணின் சுத்தத்தை, அந்த பெண்ணின் சமையலறை சுத்தத்தை வைத்து தான் கணிப்பார்கள். அதே போல் பெண்களும் தங்களது சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவர். நமது சமையலறை தூய்மையை காக்கவும், சமையல் பொருட்களின் சுத்தத்தை பேணி காக்கவும் நாம் பல வழிமுறைகளை கையாள்கிறோம். தற்போது இந்த பதிவில், நாம் அறிந்திராத சில சமையலறை டிப்ஸ் பற்றி பார்ப்போம்.
எண்ணெய் பாட்டில்
நமது சமையலறையில் எண்ணெய் பாட்டில் வைக்கும் இடம், பாட்டிலில் இருந்து ஆயில் கசிவதால், சற்று எண்ணெய் தன்மையுடன் காணப்படும். இதனை தடுக்க, நமது வீடுகளில் நாம் பயன்படுத்தாத சாக்ஸ் இருந்தால், அந்த சாக்ஸை நன்கு கழுவி காய வைத்து, ஆயில் பாட்டிலில் மாட்டி வைத்தால், எண்ணெய் கசியாது.
உருளைக்கிழங்குடன் வெங்காயம்
நாம் சந்தையில் காய்கறிகள் வாங்கி வரும் போது சில சமயங்களில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை ஒரே பையில் போடுவதுண்டு. அவ்வாறு சேர்த்து வைப்பதால், வெங்காயம், உருளைக்கிழங்கில் பூஞ்சைகளை ஏற்படுத்தும். எனவே அவற்றை தனித்தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
மிக்சி ஜார்
நாம் மிக்சி ஜாரை தினமும் பயன்படுத்துவதால், அந்த ஜாரின் கூர்மை மழுங்கி போயிருக்கும். அதனை கூர்மைபடுத்த, ஜாரில் கல் உப்பை போட்டுஅரைத்தால், மிக்சி ஜாரின் கத்தி கூர்மையாகும்.
பருப்பில் வண்டு
நமது வீடுகளில் பருப்பை நீண்ட நாட்கள் வைத்திருந்தால் வண்டு வரும். இதனை தடுக்க பருப்பை வாங்கி வந்தவுடன் ஒரு சட்டியில் போட்டு, நன்கு வறுத்து பின் ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் நீண்ட நாட்கள் வண்டு வராமல் இருக்கும்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…