வாழைக்காய் பொடிமாஸ் செய்வது எப்படி?

Published by
K Palaniammal

வாழைக்காய் -வாழைக்காய் வைத்து பொடிமாஸ் செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • வாழைக்காய் =3
  • துவரம்பருப்பு =1 ஸ்பூன்
  • மிளகு =2 ஸ்பூன்
  • தனியா =1/2 ஸ்பூன்
  • சீரகம் =1 ஸ்பூன்
  • சோம்பு =1/2 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் =2
  • சின்ன வெங்காயம் =10
  • பூண்டு =4 பள்ளு
  • துருவிய தேங்காய் =3 ஸ்பூன்
  • கொத்தமல்லி இலை சிறிதளவு
  • நல்லண்ணெய் =5 ஸ்பூன்

செய்முறை:

வாழைக்காயை இருபுறமும் காம்புகளை நீக்கி தோலுடன் வேகவைத்து கொள்ளவும். 50 சதவீதம் வேக வைத்தால்  போதுமானது ,பிறகு அதை ஆறவைத்து துருவி எடுத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு, தனியா ,மிளகு, சீரகம் ,சோம்பு  ஆகியவற்றை மிதமான தீயில்  வறுத்து ஆற வைத்து பொடித்துக் கொள்ளவும்.

அதே பாத்திரத்தில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து வெங்காயம், கருவேப்பிலை ,பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பாதி வெந்தால் போதுமானது ,இப்போது  துருவி வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து கிளறி விடவும்.

வாழைக்காய் முக்கால் பதம் வெந்தவுடன் உப்பு மற்றும் நம் பொடித்து  வைத்துள்ள பவுடரையும் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி விடவும். பிறகு தேங்காய் துருவலையும், கொத்தமல்லி இலைகளையும் தூவி 1 நிமிடம்  கிளறி இறக்கினால் சுவையான வாழைக்காய் பொடிமாஸ் ரெடி.

Recent Posts

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

1 minute ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

12 minutes ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

30 minutes ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

2 hours ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

3 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago