mutton paya
ஆட்டுக்கால் பாயா -பாய் வீட்டு முறையில் ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.
முதலில் ஆட்டுக்காலை சுத்தம் செய்து குக்கரில் வெங்காயம் ஒன்று ,தக்காளி ஒன்று, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு கொத்தமல்லி இலைகள் சேர்த்து10 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும் .இப்போது மிக்ஸியில் தேங்காய், முந்திரி, சோம்பு ஒரு ஸ்பூன் ,பச்சை மிளகாய் மற்றும் ஊற வைத்த கசகசாவை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பிறகு குக்கரில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு, ஒரு ஸ்பூன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு பொடி பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி புதினாவையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இப்போது அரை ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வேக வைத்த ஆட்டுக்காலையும் சேர்த்துக் கொள்ளவும். இப்போது அரைத்த விழுதையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கினால் மணக்க மணக்க ஆட்டுக்கால் பாயா தயார்.
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…