mutton pickle
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் .
குக்கரில் அரை கிலோ மட்டன் தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து 100 ml தண்ணீர் சேர்த்து மூணு அல்லது நாலு விசில் விட்டு வேக வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் மல்லி , சீரகம் ,பட்டை ,ஏலக்காய், கிராம்பு இவைகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனை ஆறவைத்து மிக்ஸியில் பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 100 ml நல்லெண்ணெய் சேர்த்து வேகவைத்த மட்டனை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். எண்ணெயில் மட்டனை பொறிப்பதால் ஒரு மாதம் வரை மட்டன் கெடாமல் இருக்கும்.
பிறகு அதே எண்ணெயில் கடுகு, சீரகம் , சிறிதளவு பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு பூண்டு , சிறு துண்டுகளாக நறுக்கிய இஞ்சி சேர்த்து என்னையில் வதக்கவும். பின்பு காஷ்மீர் மிளகாய் தூள் ஸ்பூன் கலர் கொடுப்பதற்காக சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
அதனுடன் எண்ணெயில் பொரித்த மட்டனை சேர்த்து நன்கு வேக வைக்கவும். அதனை ஆற வைத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைக்கவும்.இரண்டு மூன்று நாள் கழித்து எடுத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…