புதினா கீரையின் இலை, தண்டு, வேர் என அனைத்து பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. அதில், சுவையான புதினா சப்பாத்தி செய்வது எப்படி?
புதினா மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகை ஆகும். புதினா கீரையின் இலை, தண்டு, வேர் என அனைத்து பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இவை உடலுக்கு பொலிவையும், சுறுசுறுப்பையும் தருவதோடு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தற்போது இந்த பதிவில் சுவையான புதினா சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
புதினா சப்பாத்தி செய்வதற்கு முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இஞ்சி, பூண்டு இரண்டையும் நீக்கி தோல் நீக்கி விட்டு மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சோள மாவு இரண்டையும் போட்டு அதனுடன் தயிர், வெல்லம், எண்ணெய், புதினா, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், சீரகம், தேவையான அளவு தண்ணீர், உப்பு ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு மணி நேரத்துக்குப் பின் ஊற வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திகளாக தேய்த்து தோசைக்கல்லில் போட்டு சப்பாத்திகளாக வார்த்தெடுத்தால் புதினா சப்பாத்தி தயார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…