சர்வதேச யோகா தினம்- யோகாவின் நன்மைகள்.. மன அழுத்தம் முதல் உடல் ஆரோக்கியம் வரை..

Published by
K Palaniammal

சர்வதேச யோகா தினம் -சர்வதேச யோகா தினத்தின் சிறப்புகள் , யோகாவின் நோக்கம் மற்றும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.

சர்வதேச யோகா தினம் சிறப்புகள்;

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம்  கொண்டாடப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொது சபையில் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.

மேலும் ஜூன் 21ம் தேதியை  அதற்காக பரிந்துரையும் செய்தார். 2014ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று 193 உறுப்பினர்கள் கொண்ட ஐநா சபையானது  ஜூன் 21ம் தேதியை  பன்னாட்டு யோகா தினமாக கொண்டாடலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்முறையாக 2015, ஜூன் 21 அன்று டெல்லியில் பிரம்மாண்டமான  ஏற்பாடுகளுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜூன் 21 நாளானது வடக்கு அறைக்கோளத்தின் மிக நீண்ட நாளாக உள்ளது.

யோகக் கலையின் நோக்கமும் வரலாறும்;

யோகா என்பது உடல் ,மனம், அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும் கலையாகும் .யோகா வேதகாலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என ஆராய்ச்சிகள் கூறுகிறது . ஆனால் யோகக் கலை பதஞ்சலி முனிவரால் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டது.

பின்பு புத்தர் காலத்தில் அதிகமாக பரவாலாயிற்று ,இதனைத் தொடர்ந்து விவேகானந்தர் போன்ற அறிஞர்களால் அதிகம் பிரசங்கம் செய்யப்பட்டு வெளிநாடுகளிலும் பரவத் துவங்கியது. இது உலகம் முழுவதும் அறிந்த உடற்பயிற்சியாகவும் உள்ளது.

மேலும் யோகா உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கூடிய ஒரு ஒழுக்க நெறியாகவும் உள்ளது. தற்போது பிரபலங்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை யோகா அதிகம் செய்யப்பட்டு வருகிறது.

யோகாவின் நன்மைகள்;

உடல், மனம், ஆன்மா இவற்றை ஒன்றோடு ஒன்று இணைக்க யோகா உருவாக்கப்பட்டது. வாழ்க்கையில் சில சமயங்களில் மன அழுத்தம் ஏற்படும் . இதனால் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.

முதுகு வலி ,கழுத்து வலி, பதட்டம், தலைவலி, மனச்சோர்வு போன்றவற்றிற்காகவே பல யோகா உள்ளது .இதனை செய்தால் நல்ல தீர்வும் கிடைக்கிறது. தினமும் யோகா செய்வதன் மூலம் மன தெளிவு, அமைதி, சுறுசுறுப்பு போன்றவற்றை உருவாக்கும். மன அழுத்தம் நீக்கப்படுகிறது.

முதுகு தண்டு உறுதியாகப்படுகிறது, சீரான வளர்ச்சிதை மாற்றத்தை பராமரிக்கவும் உதவுகிறது, குறிப்பாக கோபத்தை குறைக்கக்கூடியது, முதுமையை தள்ளிப் போடக் கூடியதும் கூட.. இப்படி ஏராளமான நன்மைகளைக் கொண்ட யோக பயிற்சியை நம் அனைவரும் பின்பற்றி வாழ்வில் ஒழுக்கத்தையும் ஆரோக்கியத்தையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வோம்.

Recent Posts

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

3 minutes ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

34 minutes ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

1 hour ago

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!

வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…

1 hour ago

உயரும் Ola, Uber கட்டணம்.., புதிய விதிகள் என்ன.? மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு.!

டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…

2 hours ago

அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!

தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…

2 hours ago