eye [Imagesource : representative]
பெற்றோர்கள் தங்களது குழந்தையை எந்த வகையில் அழகுபடுத்த முடியும் என்று தான் பார்ப்பர். தங்களது குழந்தைகளை பார்த்து, பார்த்து அழகுபடுத்துவர். இது பெற்றோர்களின் குணம் என்றாலும், அவர்களை அழகுபடுத்தும் முறை குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
அந்த வகையில் பெற்றோர் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கு கண்மை பயன்படுத்துகின்றனர். நாம் அழகுக்காக குழந்தைகளுக்கு மை பயப்படுத்துவது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கும். குழந்தைகளுக்கு மை போடுவதால் ஏற்படும் சில தீமைகள் பற்றி பார்ப்போம்.
குழந்தைகளுக்கு கண்ணில் மை போடுவதால், கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக அவை இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படவில்லை என்றால் இந்த பிரச்சனை கண்டிப்பாக ஏற்படும்.
இந்த கண் மையில், ஈயம் என்ற பொருள் உள்ளது. இது குழந்தைகளின் கண்ணில் ஒவ்வாமை, கண் சிவப்பு நிறமாக மாறுதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளின் கண்ணுக்கு மை போடுவதை தவிர்க்கலாம்.
நமது வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகளுக்கு கண் படாமல், காத்து கருப்பு அண்டாமல் இருக்க இவ்வாறு செய்ய வேண்டும் என கூறுவர். அந்த சமயங்களில் குழந்தையின் பாதத்தில் இந்த கண் மையை வைக்கலாம். சில சமயங்களில் பெரியவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக நமது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுப்படுவதை தவிர்த்து, குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது சிறந்தது.
நெல்லை : மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது…
கூகுளின் Find My Device இப்போது Google Find Hub ஆக மாறி, ஆண்ட்ராய்டு ஃபோன்கள், இயர்பட்ஸ், புளூடூத் டிராக்கர்கள்…
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 18, 2025) பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம்…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
சென்னை: மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுரை ஆதீனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில்,…
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…