லைஃப்ஸ்டைல்

Kidney Stone : சிறுநீரகத்தில் கற்களா..? அப்ப கண்டிப்பா இதை செய்து சாப்பிடுங்க..!

Published by
லீனா

இன்று பெரும்பாலானவர்களுக்கு சிறுநீரக கற்கள் பிரச்னை  காணப்படுகிறது. இந்த கற்கள் கால்சியம், யூரிக் அமிலம் அல்லது சிஸ்டைன் போன்ற தாதுக்களின் படிகங்களால் ஆனவை. இந்த பிரச்னை ஏற்படுவதர்க்கு காரணம் என்னவென்றால், அதிகப்படியான கால்சியம், யூரிக் அமிலம் அல்லது சிஸ்டைன் உள்ள உணவுகளை உண்ணுதல்.

குறைந்த அளவு தண்ணீர் குடித்தல், சிறுநீரில் அதிக அமிலத்தன்மை அல்லது காரத்தன்மை காணப்படுதல், சிறுநீர்க்குழாய் தொற்று போன்ற பிரச்னைகளால் இந்த கற்கள் உருவாகிறது. இந்த கற்களை கரைக்க கூடிய ஆற்றல் ரணகள்ளி தாவரத்திற்கு அதிகமாக உள்ளது.

ரணகள்ளி ஒரு சக்திவாய்ந்த மூலிகை ஆகும், இது பல மருத்துவ நன்மைகளை வழங்குகிறது. ரணகள்ளி சாற்றை உட்கொள்வது சிறுநீரக கற்கள், சளித்தொற்றுகள், வீக்கம் மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இப்படிப்பட்ட மருத்துவகுணம் கொண்ட ரணகள்ளி இலையில் துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • ரணகள்ளி – 100 கிராம்
  • தேங்காய் – 1/2 கப், துருவியது
  • பச்சை மிளகாய் – 2, நறுக்கியது
  • இஞ்சி – 1/2 டீஸ்பூன், நறுக்கியது
  • பூண்டு – 2 பல், நறுக்கியது
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிது

செய்முறை 

 ஒரு கடாயில் உளுத்தம் பருப்பு, ரணகள்ளி இலை, பச்சை மிளகாய்,   வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு வறுத்து எடுத்தவற்றை மிக்ஸியில் போட்டு அதனுள் துருவிய தேங்காய், உப்பு சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். இப்போது ஆரோக்கியமான சுவையான ரணகள்ளி துவையல் தயார்.

இதையும் படிங்க – Ladies Figer : வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பு தன்மை போக சூப்பர் டிப்ஸ் இதோ..!

இந்த துவையலை இட்லி, தோசை சாதம் என எல்லாவற்றிலும் சேர்த்து சாப்பிடலாம் இது சுவையாக இருப்பதுடன் சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு முக்கியமாக நல்ல மருந்தாகும். எனவே சிறுநீரக கற்கள் பிரச்சினை உள்ளவர்கள் அடிக்கடி இந்த துவையலை சாப்பிட்டு வந்தால் பூரண குணமடையலாம்.

Published by
லீனா

Recent Posts

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 20ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை.!

சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…

7 minutes ago

இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

2 hours ago

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

3 hours ago

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…

4 hours ago

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

4 hours ago

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

6 hours ago