லைஃப்ஸ்டைல்

அடடே! அரிப்பு மற்றும் பூச்சி கடி குணமாக இந்த மூன்று பொருள் போதுமா?

Published by
K Palaniammal

நம் உடலில் தோல் அரிப்பு இரண்டு வகைகளில் ஏற்படும். ஒன்று நீண்ட காலமாக இருக்கும் மற்றொன்று பூச்சி கடியால் ஏற்படும் தோல் அரிப்பு, இவற்றுக்கு மேல் பூச்சாக எளிதில் நம் வீட்டிலே எந்த ஒரு செலவும் இல்லாமல் தயார் செய்யலாம். அதைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம். மேலும் இந்த மேற்பூச்சிகளை நாம் பயன்படுத்தும் போது எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது அச்சம் கொள்ள தேவையில்லை.

குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி, உப்பு ஒரு ஸ்பூன், விரலி மஞ்சள் அரைத்தது ஒரு ஸ்பூன். இவற்றில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் நம் வீட்டிலேயே இருக்கும். இந்த குப்பைமேனி இலை சாலையோரங்களிலும் நீர்நிலை இருக்கும் இடத்திலும் அதிகமாக காணப்படும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு இலை. இதை மூன்றையும் சிறிது துளிகள் தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்து அரிப்பு மற்றும் பூச்சி கடித்த இடங்கள் தடிப்புகள் போன்ற இடங்களில் மேற்பூச்சாக  காலை மாலை என இரு வேலைகளில் தடவி வரலாம். மேலும் கரப்பான் எனப்படும் தோல் தடித்து இருப்பதற்கும் இதை பயன்படுத்தலாம். சேற்றுப் புண்ணிற்கும் இதை தடவி வரலாம். அது மட்டும் இல்லாமல் கால் பாதத்தில் ஏற்படும் வெடிப்புடன் கூடிய அரிப்பிற்கும் இதை பயன்படுத்தலாம். இதனால் அரிப்பின் தீவிரம் குறைக்கப்படும்.

அடடே இது தெரியாம போச்சே! தயிர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

இதனை உள்ளுக்குள்ளும் குடித்து வரலாம் சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து வெறும் வயிற்றில் காலை வேளையில் தொடர்ந்து ஏழு முதல் 14 நாட்கள் எடுத்து வரலாம். மேலும் ரத்தத்தை சுத்திகரிக்க அருகம்புல் சாரு 100 எம்எல் எடுத்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து காலை வெறும் வயிற்றில் ஒரு வாரம் முதல் இரண்டு வாரம் வரை எடுத்து வரலாம்.

தோல் பிரச்சனை இருக்கும் போது எடுத்து தவிர்க்க வேண்டிய உணவுகள்:

மீன் முட்டை கருவாடு போன்ற அனைத்து அசைவ உணவுகள், கத்தரிக்காய் தட்டப்பயிறு அகத்திக்கீரை பாகற்காய், புளிப்பு சுவை கொண்ட பழங்கள் மற்றும் உணவுகள் தவிர்ப்பது நல்லது. இந்த மாதிரி உணவு பழக்கங்களை மேற்கொண்டு குப்பைமேனி சாற்றை மேற்பூச்சாக பூசி உள்ளுக்குள் அருகம்புல் சாறு அருந்தி வந்தால் தோல் பிரச்சனை, அரிப்பு ,பூச்சிக்கடி போன்றவை விரைவில் குணமாகும். கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக இருந்து வரும் தடிப்பு மற்றும் கரப்பான் கூட கட்டுக்குள் வரும்.

வேறு நோய்களுக்கு மருந்து உட்கொண்டாலும் இந்த மேற்பூச்சை  பயமின்றி பூசி வரலாம். நம் வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து எந்த ஒரு செலவும் இன்றி குணப்படுத்தலாம். மேலும் இதைத் தாண்டி தொந்தரவு ஏற்பட்டால் மருத்துவரை அணுகலாம்.

Published by
K Palaniammal

Recent Posts

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

5 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

6 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

7 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

7 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

7 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

8 hours ago