குறட்டை விடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்.? இதோ அதற்கான தீர்வு.!

Published by
K Palaniammal

தூக்கத்தில் குறட்டை விடுவது என்பது சாதாரணமாக தோன்றலாம். ஆனால் அது உடலில் ஏற்படும் பாதிப்பின் அறிகுறியாகும். இதனால் அவர்களுக்கு தூக்கம் கெடுகிறதோ இல்லையோ பக்கத்தில் தூங்குபவரின் தூக்கம் மிகவும் பாதிப்படையும். பெண்களை விட ஆண்களுக்கு இந்த குறட்டை விடும் பழக்கம் அதிகம் உள்ளது.

இதனால் இதய நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே இந்தக் குறட்டை ஏன் வருகிறது. அதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நாம்  தூங்கும் போது நம்முடைய தசைகள் தளர்வடைந்து விடும். அதனால் நாக்கின் அடிப்பகுதி, உள்நாக்கு போன்றவை சுவாசப் பாதையை ஓரளவு பாதியாக அடைத்து விடும். இந்நிலையில் காற்று செல்ல சிரமம் ஏற்பட்டு தசைகளில் அதிர்வு ஏற்படும். இந்த அதிர்வு தான் குறட்டை என்கிறோம்.

சளி இருமலுக்கு இந்த ரசம் வைங்க.? சளியும் காலி ரசமும் காலி.!

இதைவிட தீவிர நிலை ஒன்று உள்ளது அப்ஸ்ட் ரெக்ட்டிவ் ஸ்லீப் அப்னியா. இது குறட்டையை விட ஒரு படி மேல் எனலாம். கிட்டத்தட்ட 10 முதல் 15 செகண்ட் சுவாச பாதையை முழுமையாக அடைத்து விடும். இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு தூக்கம் பாதிப்படையும்.

குறட்டை ஏன் வருகிறது?

உடல் பருமன், மதுப்பழக்கம் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், சைனஸ் தொந்தரவு மற்றும் உள்நாக்கில் பிரச்சனை, தாடை பகுதி உள்நோக்கி இருப்பது போன்ற காரணங்களால் குறட்டை ஏற்படுகிறது.

நாம் வீட்டிலேயே இதை பரிசோதித்துக் கொள்ளலாம். வாயை திறக்கும் போது தொண்டையின் பின்புறம் அதாவது உள்நாக்கு தெரிய வேண்டும். அப்படி தெரியவில்லை என்றால் அப்ஸ்ட்ரெக்ட்டிவ் ஸ்லீப் அப்னியா வர வாய்ப்பு உள்ளது.

தம்மா துண்டு கடுகுல இவ்வளவு விஷயம் இருக்கா.? இது தெரியாம போச்சே.!

குறட்டையை குறைப்பதற்கான தீர்வு

  • உடல் பருமனை குறைக்க வேண்டும். மது மற்றும் புகைபிடிக்கும் பழக்கத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • தூக்க மாத்திரை, உடல் எடை குறைப்பதற்கான மாத்திரை போன்றவற்றை நிறுத்த வேண்டும்  அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்றிக் கொள்ளலாம்.
  • தூங்கும்போது இடது புறம் அல்லது வலது புறமாக படுக்க வேண்டும்.
  • மூக்கின் துவாரத்தில் நல்லெண்ணையை லேசாக தடவிக் கொள்ளலாம்.
  • உயரமான தலையணைகளை பயன்படுத்தலாம்.
  • வெதுவெதுப்பான பாலில் மஞ்சத்தூள் கலந்து இரவு தூங்குவதற்கு முன் குடித்து வரலாம்.
  • மேலும் இஞ்சி டீ அருந்தலாம் மற்றும் ஏலக்காய் பொடியை தண்ணீர் கலந்து அருந்தி வரலாம்.
  • யூகலிப்ட்ஸ் எண்ணையை இரவு தூங்குவதற்கு முன் நுகர்ந்து விட்டு தூங்கச் செல்லலாம். இதன் வாசனை சுவாச பாதையில் ஏற்படும் அடைப்பை குறைக்கும். மேலும் நெஞ்சு சளியை நீக்கும்.

எனவே இந்த வழிமுறைகளை பின்பற்றி குறட்டையை விரட்டி மகிழ்ச்சியான தூக்கத்தை பெறுங்கள் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியான தூக்கத்தை கொடுங்கள்.

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

7 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

7 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

9 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

9 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

11 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

12 hours ago