பால் இருந்தா போதும் வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்யலாம்..!

Published by
K Palaniammal

Ice cream-வீட்டிலேயே வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்வது எப்படி என இப்பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • பால் =அரை லிட்டர்
  • சர்க்கரை =கால் கப்
  • சோளமாவு =2 ஸ்பூன்
  • வெண்ணிலா எசென்ஸ் அல்லது ஏலக்காய் தூள் =1/2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் பாலை கொதிக்க வைக்கவும் பிறகு சோள மாவுடன் சிறிதளவு பால் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொதிக்கும் பாலில் சேர்த்து கிளறவிடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். கைவிடாமல் கிளறினால் தான் கட்டியாகாமல் இருக்கும்.

மேலும் மாவு அதிகமாக சேர்க்கக்கூடாது, சேர்த்தால் ஐஸ்கிரீம் சுவையாக இருக்காது.  பால் ஓரளவுக்கு கெட்டி பதத்திற்கு வந்தவுடன் சர்க்கரையை சேர்த்து கிளறிவிட்டு கொதிக்க விடவும். இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து வெண்ணிலா எசன்ஸ் அல்லது ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.

பால் நன்றாக ஆறியவுடன்  அதை மிக்ஸியில் அடித்து மூன்று மணி நேரத்திற்கு ஃப்ரீசரில் வைக்கவும். பிறகு திரும்பவும் எடுத்து மறுபடியும் மிக்ஸியில் அடிக்கவும் அப்போதுதான் ஐஸ்கிரீம் மிருதுவாக இருக்கும். அதை மீண்டும்  8 மணி நேரம் ஃப்ரீசரில்   வைத்து எடுத்தால் ஐஸ்கிரீம் தயாராகிவிடும்.

ஐஸ்கிரீமை எடுக்கும் கரண்டியை சுடு தண்ணீரில் நனைத்து பிறகு ஐஸ்கிரீமை எடுத்தால் எடுப்பதற்கு சுலபமாக வரும்.

எனவே குழந்தைகளுக்கு நம் வீட்டிலேயே சுகாதாரமான  முறையில் ஐஸ்கிரீம்களை செய்து கொடுக்கலாம்.

Recent Posts

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

14 minutes ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

1 hour ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

1 hour ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

2 hours ago

திருவள்ளூர் ரயில் தீ விபத்து.., தீயை முழுமையாக அணைத்தும், மீண்டும் தீ.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5:20 மணியளவில் சென்னை துறைமுகத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எரிபொருள் (டீசல்)…

2 hours ago

ஜூலை 15, 16, 17ம் தேதிகளில் கனமழை வெளுக்கும்.! எந்தெந்த மாவட்டங்களில்?

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

4 hours ago