சென்னை

சோகம்…! தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் விபத்தினால் 9 பேர் பலி!

Published by
கெளதம்

தமிழ்நாட்டில் இன்று 4 வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரி கடலில் குளித்துக்கொண்டிருந்த 3 பள்ளி மாணவர்கள் நேற்று மாயமான நிலையில், இன்று உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உவரி கடலில் நேற்று குளிக்க சென்ற போது, மாயமான ஆகாஷ், ராகுல், முகேஷ் ஆகியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்த நிலையில், மூன்று பேரின் உடல்களும் இன்று கரை ஒதுங்கின. ஒரே நேரத்தில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்த கார் மதுராந்தகம் அருகே, நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் லாரி மீது பைக் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். இது போக, சமயபுரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

Published by
கெளதம்

Recent Posts

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

21 minutes ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

41 minutes ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

1 hour ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

3 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

3 hours ago