சென்னை

சென்னையில் உலகத்தரத்தில் பன்னாட்டு அரங்கம்! முதலமைச்சர் அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னையில் உலக தரத்தில் “கலைஞர் கன்வென்ஷன் சென்டர்” என்ற பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு .

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனை, வரலாறு குறித்து பேசி புகழாரம் சூட்டினார். இதன்பின், பேசிய அவர், கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. மக்களின் மனங்களில் இன்றும் ஆட்சி செய்கிறார் கருணாநிதி. எனது தலைமையிலான திராவிட மாடல் அரசை கருணாநிதிக்கும், கருணாநிதியின் புகழுக்கும் காணிக்கையாக்கிறேன் என்றார்.

மேலும், சென்னையில் உலக தரத்தில் “கலைஞர் கன்வென்ஷன் சென்டர்” என்ற பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்றும் 25 ஏக்கர் பரப்பளவில் 5,000 பேர் அமரும் வகையில் உலக தரத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். பன்னாட்டு மாநாடுகள், திரைப்பட விழாக்கள் எல்லாம் பன்னாட்டு அரங்கத்தில் நடைபெறும், சிங்கப்பூர் ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது இந்த எண்ணம் உதயமானது. மிக பிரம்மாண்டமான முறையில் கலைஞர் கன்வென்சன் சென்டர் அமையவுள்ளது என கூறினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

யார் கனவு நனவாகும்? 191 ரன் அடிச்சா கப் உங்களுக்கு.., சவாலான இலக்கு வைத்த ஆர்சிபி.!

அகமதாபாத் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப்…

21 minutes ago

”விருதுகள், மானியங்களை விரைந்து வழங்கிடுக”- முதல்வர் ஸ்டாலினுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம்.!

சென்னை : தமிழக அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்படங்களுக்கான மானியங்கள் கடந்த 2016 முதல் 2022 வரை நிலுவையில் உள்ளது.…

1 hour ago

”ஜூன்-5ல் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட வேண்டும்” – தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம்.!

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான்…

1 hour ago

ஆர்சிபிக்கு முதல் அடி: தூக்கி அடித்த சால்ட்.., அலேக்காக கேட்ச் புடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…

2 hours ago

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப்போட்டி.., வானில் இந்திய ராணுவத்திற்கு மரியாதை.!

அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப்…

2 hours ago

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப் போட்டி.., வெல்லப்போவது யார்? டாஸ் – பிளேயிங் லெவன் இதோ.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…

3 hours ago