கடலூர்

ஊராட்சி மன்ற தேர்தல் தோல்வி.. பழிக்கு பழி.! நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை.! 10 பேர் உடனடி கைது.!

Published by
மணிகண்டன்

கடலூர் மாவட்டத்தில் மீனவர் மதியழகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடலூர் தாழங்குடா கிராமத்தை சேர்ந்த மதியழகன் நேற்று மஞ்சக்குப்பம் பகுதி சிவன் கோவிலில் குடும்பத்துடன் வந்தவரை 6 பேர் கொண்ட கும்பல் அவரை ஓட ஓட துரத்தி நடு ரோட்டில் கொடூரமாக வெட்டி கொலை செய்தது.மேலும், அந்த கொலைகார கும்பல் அவரது முகத்தை சிதைத்து, அரிவாளை அங்கேயே விட்டு சென்றது.

வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மதியழகன் மனைவி  சாந்தி கடலூர் தாழங்குடா ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி மனைவி தோல்வி அடைந்துள்ளனர்.

மேலும், கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் மதியழகன் அவரது தரப்பை சேர்ந்தவர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணியின் சகோதரரை கொலை செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் மதியழகன் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கு நடைபெற்று வருவதால் வெளியில் இருந்த மதியழகன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை வழக்கில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி அவரது தரப்பை சேர்ந்த பிரகலாதன், தினேஷ், அறிவு, பாரதி, ராமானுஜம், விஜய், சஞ்சய்குமார், குருநாதன், ராஜேந்திரன், ராமலிங்கம், முத்து, மைக்கேல், பாலமுருகன், மணிகண்டன், தேவேந்திரன், சந்திரவாணன், சரவணன், அர்ஜூனன், ராஜவேல், ராஜேஷ், அந்தோணிசெல்வம், ஆகாஷ், பிரகாஷ் மனைவி வச்சலா ஆகிய 24 பேர் திட்டமிட்டு மதியழகனை வெட்டிக்கொலை செய்தது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி, கவிதா, உதயகுமார் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். எல்லை பகுதிகளில் தீவிர சோதனையில் காவலர்கள் ஈடுப்பட்ட வந்த நிலையில்,  விழுப்புரம் மாவட்டத்திற்கு தப்பி செல்ல முயன்ற 10 பேரை தனிப்படை போலீசார் கடலூர்-விழுப்புரம் மாவட்ட எல்லையில் மடக்கி பிடித்தனர். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணை, குற்றவாளிகளை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

7 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

8 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

8 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

8 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

9 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

9 hours ago