கடலூர்

ஊராட்சி மன்ற தேர்தல் தோல்வி.. பழிக்கு பழி.! நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை.! 10 பேர் உடனடி கைது.!

Published by
மணிகண்டன்

கடலூர் மாவட்டத்தில் மீனவர் மதியழகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடலூர் தாழங்குடா கிராமத்தை சேர்ந்த மதியழகன் நேற்று மஞ்சக்குப்பம் பகுதி சிவன் கோவிலில் குடும்பத்துடன் வந்தவரை 6 பேர் கொண்ட கும்பல் அவரை ஓட ஓட துரத்தி நடு ரோட்டில் கொடூரமாக வெட்டி கொலை செய்தது.மேலும், அந்த கொலைகார கும்பல் அவரது முகத்தை சிதைத்து, அரிவாளை அங்கேயே விட்டு சென்றது.

வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மதியழகன் மனைவி  சாந்தி கடலூர் தாழங்குடா ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி மனைவி தோல்வி அடைந்துள்ளனர்.

மேலும், கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் மதியழகன் அவரது தரப்பை சேர்ந்தவர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணியின் சகோதரரை கொலை செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் மதியழகன் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கு நடைபெற்று வருவதால் வெளியில் இருந்த மதியழகன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை வழக்கில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி அவரது தரப்பை சேர்ந்த பிரகலாதன், தினேஷ், அறிவு, பாரதி, ராமானுஜம், விஜய், சஞ்சய்குமார், குருநாதன், ராஜேந்திரன், ராமலிங்கம், முத்து, மைக்கேல், பாலமுருகன், மணிகண்டன், தேவேந்திரன், சந்திரவாணன், சரவணன், அர்ஜூனன், ராஜவேல், ராஜேஷ், அந்தோணிசெல்வம், ஆகாஷ், பிரகாஷ் மனைவி வச்சலா ஆகிய 24 பேர் திட்டமிட்டு மதியழகனை வெட்டிக்கொலை செய்தது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி, கவிதா, உதயகுமார் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். எல்லை பகுதிகளில் தீவிர சோதனையில் காவலர்கள் ஈடுப்பட்ட வந்த நிலையில்,  விழுப்புரம் மாவட்டத்திற்கு தப்பி செல்ல முயன்ற 10 பேரை தனிப்படை போலீசார் கடலூர்-விழுப்புரம் மாவட்ட எல்லையில் மடக்கி பிடித்தனர். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணை, குற்றவாளிகளை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

4 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

5 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

5 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

6 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

6 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

8 hours ago