Cuddalore govt hospital [Image source : cuddaloreonline.in]
கடலூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக மனைவி பாதிக்கப்பட்டதாக கணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி பத்மாவதிக்கு கடந்த 2022 செப்டம்பரில், கடலூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுக்கப்பட்டதால் அதன் பிறகு வயிறு வலி காரணமாக அடிக்கடி மருத்துவமனை சென்று வந்துள்ளார்.
அதன்பிறகு, கடலூர் ஜிப்மர் மருத்துவனையில் பரிசோதனை செய்த போது பிரசவ அறுவை சிகிச்சையின் போது கருப்பபையுடன் குடலையும் சேர்த்து தைத்தது தெரியவந்தது. இதனை அடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் வெங்கடேசன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மருத்துவ அறிக்கை வேண்டும் என அரசு மருத்துவர்களிடம் ஆட்சியர் கேட்டுள்ளார்.
ஆனால், தற்போது வரையில் அரசு மருத்துவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும், இதுகுறித்து ஆட்சியரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி, இன்று கடலூர் அரசு மருத்துவமனைக்கு குடும்பத்துடன் வந்த வெங்கடேசன் கூட்டாக தீக்குளிக்க முயன்றார். மேலும் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் உடல் உறுப்புகளை தனமாக எடுத்துக்கொள்ளுங்கள் என உருக்கமாக கூறினார். உடனே அங்கிருந்த போலீசார் இந்த சம்பவத்தை தடுத்தி நிறுத்தி வெங்கேசன் குடும்பத்தாரிடம் பேசுவரத்தை நடத்தி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜூலை 1, 2025 அன்று…
ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின்…
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…