[Representative Image]
பெரம்பலூர் அருகே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்ற 108 ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த டிராக்டரை வேன் ஒன்று முந்தி செல்ல முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்து குறித்து அறிந்தவுடன் அவர்களை மீட்க 108 ஆம்புலன்ஸ் அப்பகுதிக்கு வந்தது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து வேகமாக வந்து மோதியதில் ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்றவர்கள் மீது பேருந்து மோதி ஏற்பட்ட உயிரிழப்புகள் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…