தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து திருவாரூரில் நன்னிலம் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்று நன்னிலம் தாசில்தாரிடம் […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியில் விவசாய நிலத்தில் ONGC நிர்வாகம் எரிவாயு எடுப்பதை கண்டித்தும். ONGC நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தியும்.ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக நன்னிலம் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
ஒஎன்ஜிசிக்கு எதிராக பரப்புரை செய்ததாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள கல்லடிமேடு கிராமத்தை சேர்ந்த 2 கல்லூரி மாணவிகள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனால் அக்கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது.
திருவாரூர்: திருவாரூரில் சாலைமறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் நல சங்க தலைவர் சேதுராமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்க செயலாளர் ராமமூர்த்தி உள்பட 165 விவசாயிகள் மீது கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பா சாகுபடிக்கு வெட்டாற்றில் முறை வைக்காமல் நீர் திறக்கக்கோரி கொரடாச்சேரியில் மறியல் போராட்டம் நடந்தது. source: www.dinasuvadu.com
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள வெண்ணவாசல், பருத்தியூர், காவாலக்குடி, நாளில்ஒன்று, கண்கொடுத்தவனிதம், விடயபுரம், முசிறியம், திட்டாணிமுட்டம், மேலராதாநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் சம்பா சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த கிராமங்களுக்கு தேவையான பாசனநீர் பாண்டவையாற்றில் இருந்து கிடைக்கிறது. இந்த நிலையில் பாண்டவையாற்றில் இருந்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் அந்த கிராமங்களில் சம்பா பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. இதே நிலை நீடித்தால் பயிர்கள் […]
திருவாரூர் மாவட்டம் அருகே மன்னார்குடி வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ 2.43 கோடி மோசடி செய்த வழக்கில், நகை மதிப்பீட்டாளர் உள்ளிட்ட 4 பேர் கைது..