[Image source : Twitter/@airnewsalerts]
இன்று வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் நடந்து சென்றனர்.
அசுர சக்திகளை வீழ்த்த முருகன் தோன்றிய தினம் தான் வைகாசி விசாகமாக ஆண்டு தோறும் வைகாசி மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த வைகாசி விசாகமானது திருச்செந்தூர் சுப்ரமணியன் கோவிலில் (முருகன் கோவில்) பக்தர்கள் மத்தியில் வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது.
இந்த வைகாசி தினத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நடந்தே செல்வது வழக்கம். தூத்துக்குடியில் இருந்து மட்டுமல்லாது தென்தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல நாட்கள் நடந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருவார்கள்.
இன்று வைகாசி விசாக திருவிழாஎன்பதால் , நேற்று மாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் பாதை யாத்திரையாக திருச்செந்தூர் புறப்பட்டனர். வழிநெடுகிலும், பக்தர்கள் இளைப்பாற தன்னார்வலர்கள் தண்ணீர், குளிர்பானம், நீர் ஆகாரம், உணவு என கொடுத்து வந்தனர். இன்று திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…