விழுப்புரம்

ஆன்மிகம் தான் தமிழை வளர்த்தது.! புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பேச்சு.!

Published by
மணிகண்டன்

தெலுங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராகவும் பொறுப்பில் இருக்கும் தமிழிசை சௌந்தராஜன் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற ஆன்மீக விழாவில் கலந்து கொண்டு கம்பராமாயணம் பற்றியும், தமிழை பற்றியும் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழில்லாமல் ஆன்மிகம் இல்லை. ஆன்மிகம் இல்லாமல் தமிழ் இல்லை. ஆன்மிகம் தான் தமிழை வளர்த்தது. பல்வேறு புலவர்கள் தமிழில் ஆன்மீக பாடல்கள் பாடி தமிழை வளர்த்துள்ளனர் என குறிப்பிட்டார்.

மேலும், தமிழகத்தில் தமிழிக்கும் ஆன்மீகத்திற்கு சம்பந்தமில்லை என்பது போல உருவகம் செய்து வருகின்றனர். தமிழையும் ஆன்மீகத்தையும் எப்போதும் பிரிக்க முடியாது. என குறிப்பிட்ட அவர் அடுத்து, கம்பர் கம்பராமாயணம் எழுதியதுபற்றி கூறினார்

கம்பர், கம்பராமாயணம் அரங்கேற்றும் போது இரனிய காண்டம் இல்லை. அதனை அவர் பாடுகையில் கோபமாக இருந்த நரசிம்மர் சிலை சிரித்தது. தமிழை கேட்டால் சிலை போல இருப்பவர்களும் சிரிப்பார்கள். கம்பராமாயணத்தில் ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்றும், தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்றும், அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்றும் கம்பராமாயணம் கூறுகிறது. அதில் ராமர் முகம் ஓவிய தாமரை போல இருக்கும் என்றும் அந்த விழாவில் தமிழிசை சவுந்தராஜன் உரையாற்றினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

54 minutes ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

1 hour ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

1 hour ago

”ஈரான் ஒருபோதும் சரணடையாது”- அமெரிக்க அதிபருக்கு ஈரான் தலைவர் கடும் எச்சரிக்கை.!

இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…

2 hours ago

சாகித்ய அகாடமி விருதுகள்: விஷ்ணுபுரம் சரவணனுக்கு சாகித்ய பால புரஸ்கர் விருது அறிவிப்பு.!

டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…

3 hours ago

இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.., சென்னை ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்த ரத்து.!

சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது.  அதன்படி, இரவு…

3 hours ago