சிறுமியின் வங்கி கணக்கில் பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ .10 கோடி இருப்பு வைக்கபட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் வங்கிக் கணக்கில் ரூ .10 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதை கண்டு அந்த சிறுமி அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில், இந்த சிறுமி, கடந்த 2018 முதல் பன்ஸ்டியில் உள்ள அலகாபாத் வங்கி கிளையில் ஒரு கணக்கு வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. சிறுமி, கடந்த திங்களன்று வங்கிக்குச் சென்றுள்ளார், அங்கு அதிகாரிகள் சிறுமியின் கணக்கீழ் ரூ .9.99 கோடி இருப்பதாக கூறினர்.
இதனையடுத்து, பன்ஸ்டி காவல் நிலையத்திற்குச் சென்று அந்த சிறுமி புகாரளித்தார். அதில், கான்பூர் தேஹத் மாவட்டத்தைச் சேர்ந்த நீலேஷ் குமார் என்ற நபர் 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது அடையாள விவரங்களை கேட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவின் கீழ் வங்கி கணக்கில் நிதியை மாற்றுவதற்கு இது தேவை என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பன்ஸ்டி காவல் நிலைய பொறுப்பாளர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்தார்.
இருப்பினும், செய்தி நிறுவனமான டி.என்.ஏ-யின் அறிக்கையின்படி, சிறுமியின் கணக்கில் ரூ .5,000 மட்டுமே இருந்தது, ஆனால், சிறுமியின் கணக்கில் ரூ .17 லட்சம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…