மூன்று நாள்களுக்கு பிறகு சீன இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இரண்டு மேஜர்கள் உட்பட 10 இந்திய ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக போர்பதற்றம் நிலவி வருகிறது. கடந்த திங்கள்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தததாக அறிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் 76 ராணுவ வீரர்கள் சீன இராணுவத்தால் தாக்கப்பட்டதாகவும், அவர்களில் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில், 58 பேர் சிறு காயங்கள் ஏற்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மூன்று நாள்களுக்கு பிறகு சீன இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இரண்டு மேஜர்கள் உட்பட 10 இந்திய ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதலில் சில ராணுவ வீரர்கள் காணாமல் போனதாக தகவல் வெளியானது. அதற்கு நேற்று இந்திய ராணுவம் இந்திய வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என்று விளக்களித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக 1962 ஜூலை மாதம் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் சீன இராணுவம் இந்திய வீரர்களை சிறைபிடித்துள்ளது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…