100 வயதான தனது தாயை கட்டிலோடு வங்கிக்கு இழுத்து சென்ற மகள்.!

Published by
பால முருகன்

ஒடிசா மாநிலத்தில்  100 வயதான தனது அம்மாவை கட்டிலோடு வங்கிக்கு இழுத்து சென்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பல்வேறு ஏழைகள் தொழிலுக்கு செல்லாமல் வறுமையில் இருக்கிறார்கள், இதை கருத்தில் கொண்ட பிரதமர் பெண்களின் ஜன்தன் வாங்கி கணக்கில் மாதம் தலா ரூ. 500 என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டது. அந்த உதவி தொகை பெற்றவர்களில் ஒருவர்  ஒடிசா மாநிலத்தில் பர்கோன் கிராமத்தை சேர்ந்த 100 வயதுக்குமேல் ஆன மூதாட்டி லாபே பாகல்,  இவர் தனது வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார், மேலும் வீட்டில் இருக்கும் இவர்  இவரது வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருக்கும் பணத்தை பெற்று வர முடியவில்லை .

மேலும் இந்த நிலையில் இவருடைய மகள் புன்ஜிமாதி தேய் செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் கடந்த 9ம் தேதி தங்கள் கிராமத்தில் உள்ள கிராம வங்கிக்கு சென்று மானேஜரை சந்தித்து தனது தயார் இருக்கும் நிலையை விளக்கிக் கூறி தனது தாய் வரமுடியாத நிலையில் இருப்பதால் அவரது வங்கி கணக்கில் உள்ள 1500 ரூபாய் வழங்குமாறு கேட்டுள்ளார்.

இதற்கு மானேஜர் உங்கள் தாய் வங்கி வைத்திருக்கும் கணக்கை வைத்திருக்கும் உங்கள் தாயாரை நேரில் அழைத்து வந்தால் மட்டுமே பணத்தை வழங்க முடியும் என்றே கூறியுள்ளார், மேலும் இதனால் ஏமாற்றமடைந்த புன்ஜிமாதி தேய் சோகத்துடன் வீடு திரும்பினார். மேலும் புன்ஜிமாதி தேய் பணத்தேவை நெருங்கியதால் தனது தாயை வங்கிக்கு கூப்பிட்டு செல்ல முடிவு செய்தார், ஆனால் வாகன வசதி எதுவும் கிடைக்கவில்லை இதனால் கட்டிலில் எலும்பு தோலுமாக கிடந்த தனது தாயை அவர் படுத்திருந்த கட்டிலில் கயிறு கட்டி வெயிலில் இழுத்து சென்றுள்ளார்.

இதனை பொதுமக்கள் பரிதாபமாக பார்த்து சிலர் புகைப்படம் எடுத்து இணையதளத்திலும் வெளியிட்டனர், இதை பற்றி புன்ஜிமாதி தேய் கூறியது ” எனக்கு வேறு வழி தெரியவில்லை அதனால் தான் என்னுடைய தாயை கட்டிலில் கயிறு கட்டி இழுத்து சென்றேன் அதற்கு பிறகுதான் எனக்கு பணம் கிடைத்தது என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்
Tags: #Odisabank

Recent Posts

இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

15 minutes ago

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

1 hour ago

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…

2 hours ago

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

3 hours ago

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

5 hours ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

6 hours ago