Categories: இந்தியா

11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..! 9 மாணவர்கள் தற்கொலை..!

Published by
செந்தில்குமார்

ஆந்திராவில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை அடுத்து, 9 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் இடைநிலைத் தேர்வு வாரியத்தால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடந்தப்பட்டது. இதில் 10 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். பிறகு, கடந்த ஏப்ரல் 26ம் தேதி (புதன் கிழமை) 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 11ம் வகுப்பில் 61 சதவீத தேர்ச்சியும், 12ம் வகுப்பில் 72 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதையடுத்து, குறைவான மதிப்பெண் மற்றும் தேர்வில் தோல்வியுற்றதால் 9 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மேலும் இரு மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அதில், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பி.தருண் என்ற 17 வயது மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், 16 வயது சிறுமி ஒருவர் திரிநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

விசாகப்பட்டினத்தின் கஞ்சரபாலம் பகுதியில் உள்ள 18 வயது இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர்கள் இருவர் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு மாணவர்கள் தேர்வில் தோல்வியுற்றதற்காக தற்கொலை செய்துகொண்டுள்ளது மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!

சென்னை : லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூத்த நடிகர் சஞ்சய் தத், ''படத்தில் தனக்கு…

18 minutes ago

”என் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி இருந்தது” – ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு.!

விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். விருதாச்சலத்தில்…

49 minutes ago

Fact Check: பாடகி ஆஷா போஸ்லே மரணம்.? மகன் கூறிய உண்மை தகவல்.!

டெல்லி : ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. நேற்று கூட, பிரபல பாடகி…

1 hour ago

இந்த இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago

INDvsENG : மூன்றாவது போட்டியை பார்க்க விராட் கோலி ஏன் வரவில்லை? தினேஷ் கார்த்தி உடைத்த உண்மை!

லண்டன் : உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்  விராட்…

2 hours ago

’75 வயதானால் வழி விடுங்கள்” …யாரை சொல்கிறார் மோகன் பகவத்?

மகாராஷ்டிரா : மாநிலம் நாக்பூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்) தலைவர் மோகன் பகவத்,…

3 hours ago