நெகிழ்ச்சி வீடியோ…காலில் விழுந்த 125 வயது சிவானந்தா – உடனே பிரதமர் செய்த காரியம்!

Published by
Edison

குடியரசு தின விழாவை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் கலை, மருத்துவம்,சமூகப்பணி,அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில்,இலக்கியம் மற்றும் கல்வி,விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.

பத்ம விருதுகள்:

அதன்படி,நடப்பு ஆண்டில் மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.அதில் 4 பேருக்கு பத்மவிபூஷண் விருது,17 பேருக்கு பத்ம பூஷண் விருது,107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

விருதுகள் வழங்கிய குடியரசுத்தலைவர்:

இதனைத் தொடர்ந்து,தலைநகர் டெல்லியில் நேற்று ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் 2 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 54 பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  வழங்கினார். அதன்படி,காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்,சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனர் சைரஸ் பூனாவாலா உள்ளிட்ட பலரும் பத்ம விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

வணங்கிய பிரதமர்:

இந்நிலையில்,125 வயதான யோகா குருவான சுவாமி சிவானந்தாவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருதை வழங்கினார். விருதுக்கு முன்னதாக,விழா நடைபெறும் அரங்கிற்கு வந்த சுவாமி சிவானந்தா அவர்கள் அங்கிருந்த அனைவரையும் வணங்கிய நிலையில் பிரதமர் மோடி அமர்ந்த இடத்துக்கு சென்று அவரையும் தரையில் விழுந்து வணங்கினார்.

பின்னர்,பிரதமர் மோடி அவர்களும்,சிவானந்தாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பதிலுக்கு தலை குனிந்து வணங்கினார்.இச்செயல் விழா அரங்கில் இருந்தவர்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே,தமிழகத்தில் இருந்து ஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம் – இலக்கியம் மற்றும் கல்வி (பத்ம ஸ்ரீ), ஸ்ரீ எஸ் பல்லேஷ் பஜந்த்ரி – கலை (பத்ம ஸ்ரீ),ஸ்ரீமதி ஆர் முத்துகண்ணம்மாள் – கலை (பத்ம ஸ்ரீ), ஸ்ரீ ஏ கே சி நடராஜன் – கலை (பத்ம ஸ்ரீ விருதுகள்) ஆகியோர் விருதுகள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

7 minutes ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

43 minutes ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

3 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

3 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

4 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

5 hours ago