நெகிழ்ச்சி வீடியோ…காலில் விழுந்த 125 வயது சிவானந்தா – உடனே பிரதமர் செய்த காரியம்!

Published by
Edison

குடியரசு தின விழாவை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் கலை, மருத்துவம்,சமூகப்பணி,அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில்,இலக்கியம் மற்றும் கல்வி,விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.

பத்ம விருதுகள்:

அதன்படி,நடப்பு ஆண்டில் மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.அதில் 4 பேருக்கு பத்மவிபூஷண் விருது,17 பேருக்கு பத்ம பூஷண் விருது,107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

விருதுகள் வழங்கிய குடியரசுத்தலைவர்:

இதனைத் தொடர்ந்து,தலைநகர் டெல்லியில் நேற்று ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் 2 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 54 பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  வழங்கினார். அதன்படி,காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்,சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனர் சைரஸ் பூனாவாலா உள்ளிட்ட பலரும் பத்ம விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

வணங்கிய பிரதமர்:

இந்நிலையில்,125 வயதான யோகா குருவான சுவாமி சிவானந்தாவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருதை வழங்கினார். விருதுக்கு முன்னதாக,விழா நடைபெறும் அரங்கிற்கு வந்த சுவாமி சிவானந்தா அவர்கள் அங்கிருந்த அனைவரையும் வணங்கிய நிலையில் பிரதமர் மோடி அமர்ந்த இடத்துக்கு சென்று அவரையும் தரையில் விழுந்து வணங்கினார்.

பின்னர்,பிரதமர் மோடி அவர்களும்,சிவானந்தாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பதிலுக்கு தலை குனிந்து வணங்கினார்.இச்செயல் விழா அரங்கில் இருந்தவர்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே,தமிழகத்தில் இருந்து ஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம் – இலக்கியம் மற்றும் கல்வி (பத்ம ஸ்ரீ), ஸ்ரீ எஸ் பல்லேஷ் பஜந்த்ரி – கலை (பத்ம ஸ்ரீ),ஸ்ரீமதி ஆர் முத்துகண்ணம்மாள் – கலை (பத்ம ஸ்ரீ), ஸ்ரீ ஏ கே சி நடராஜன் – கலை (பத்ம ஸ்ரீ விருதுகள்) ஆகியோர் விருதுகள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

16 minutes ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

49 minutes ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

1 hour ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

1 hour ago

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…

2 hours ago

”ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” – மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…

2 hours ago