63 விமானங்களில் 13,300 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்- மத்திய அரசு..!

Published by
murugan

இன்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களிடம் பேசியபோது,  உக்ரைனின் கார்கிவ் நகரில் சிக்கியிருந்த இந்தியர்கள் கிட்டத்தட்ட அனைத்து இந்தியர்களும் மீட்கப்ட்டனர். அதே சமயம் சுமியைப் பற்றிய கவலையும் எங்களுக்கு தொடர்கிறது. சுமியில் வன்முறை தொடர்கிறது. இத்துடன் இங்கு போக்குவரத்து பற்றாக்குறையும் உள்ளது. பிசோச்சினில் இருந்து 298 மாணவர்களை வெளியேற்றியுள்ளோம். சுமி என்பது ரஷ்ய மற்றும் உக்ரேனிய இராணுவங்களுக்கு இடையே கடுமையான சண்டை நடக்கும் மோதல் மண்டலங்களில் ஒன்றாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 15 விமானங்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளதாகவும், அதில் சுமார் 2900 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுவரை ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் 63 விமானங்களில் சுமார் 13,300 இந்தியர்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளன. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் 13 விமான திட்டமிடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 15 விமானங்கள் மூலம் சுமார் 2,900 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

நாளை 2200 இந்தியர்கள் தாயகம் திரும்புவார்கள்: 

நாளை 13 விமானங்கள் மூலம் 2200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்புவார்கள் என  சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று 15 விமானங்கள் மூலம் சுமார் 2,900 இந்தியர்கள் ‘மீட்கப்பட்டுள்ளனர். இதில் 12 சிறப்பு சிவிலியன் மற்றும் மூன்று இந்திய விமானப்படை விமானங்களும் அடங்கும்.

13,300 இந்தியர்கள் பாதுகாப்பாக திரும்பினர்:

 பிப்ரவரி 24 அன்று ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை தொடங்கியதில் இருந்து உக்ரைன் வான்வெளி மூடப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், இந்தியா உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் மீட்டு வருகிறது. இதுவரை சுமார் 13,300 இந்தியர்களை ‘ஆபரேஷன் கங்கா’வின் கீழ் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர்.

உக்ரைனில் இருந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய நிறுவனங்கள்  தவிர இந்திய விமானப்படையும் ஈடுபட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

2 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

3 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

4 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

4 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

5 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

6 hours ago