நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெகாசஸ் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இன்று விவசாயிகள் பிரச்சனை முடங்கியுள்ளது.
கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வருகிற 13-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் உள்ளிட்ட சில பிரச்சினைகளை மையப்படுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இன்று விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக விவாதிக்கவும் திட்டமிட்டிருந்தனர். பின்னர் இன்று நடந்த கூட்டத்திலும் முதலில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கூறி கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். இதனால் 16 ஆவது நாளாக மழைக்கால கூட்டத்தொடர் முடங்கியது.
மேலும், பிற்பகல் 12 மணி வரை இக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அவையை ஒத்தி வைப்பதற்கு முன், விவசாயிகள் பிரச்சனைக்கு இந்த அவை கவலைப்படுவதில்லை என்ற தகவல் மக்களுக்கு சேரக்கூடாது. இதற்கு அவை உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…