வாட்ஸ்அப்பில் ஆண் நண்பருடன் பேசியதற்காக சகோதரியை 17வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் வசித்து வரும் 17 வயது சிறுவன் தனது சகோதரி ஆண் நண்பரிடம் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்ததற்காக துப்பாக்கியால் சகோதரியை சுட்டு கொன்றுள்ளார் .இந்த சம்பவம் குறித்து பேசிய துணை போலீஸ் கமிஷனர் வேத் பிரகாஷ் சூர்யா ,பள்ளியில் படித்து கொண்டே சலூன் கடையில் பணிபுரிந்து வருபவர் தான் அந்த 17 வயது சிறுவன் .இவரது 16 வயது சகோதரி தனது பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
சகோதரி தினமும் ஆண் நண்பர் ஒருவரிடம் தொலைப்பேசியில் பேசுவதையும் , வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவதையும் கண்ட சிறுவன் தனது சகோதரியை எச்சரித்துள்ளார் .ஆனால் சகோதரி மீண்டும் ஆண் நண்பருடன் பேசுவதை விடவில்லையாம் .இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மீண்டும் சகோதரி ஆண் நண்பருடன் பேசுவதை கண்ட சிறுவன் கண்டிக்க ,இருவரிடையே சண்டை நடந்துள்ளது . இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் சகோதரியின் வயிற்றில் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார் .
உடனடியாக சிறுமியின் பெற்றோர்கள் ஜாக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்துள்ளனர் . அதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்க சிறுவனை கைது செய்து துப்பாக்கியை கைப்பற்றினர் . அவரிடம் நடத்திய விசாரணையில் ,சிறுவன் உபயோகித்த துப்பாக்கி மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு காலமான அவரது நண்பரிடமிருந்து வாங்கியதாக கூறியுள்ளார்.மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி மீண்டு வருவார் என்று அதிகாரி கூறியுள்ளார்.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…