30 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் உள்ள நௌஷாரா மாவட்டத்தில் தர்மம் எடுத்து வந்த பெண்ணின் குடிசையிலிருந்து 2.60 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நௌஷாரா மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு குடிசையில் வசித்து வரக்கூடிய பெண்மணி ஒருவர் தர்மம் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தப் பெண்மணியை அழைத்து செல்வதற்காக நேற்று ரஜோரி மாவட்டத்தில் உள்ள முதியோர் காப்பக ஊழியர்கள் அவரது வீட்டிற்கு அப்பெண்மணியை அழைத்து செல்வதற்காக வந்துள்ளனர். மேலும், அவரது குடிசையிலிருந்து குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்த நகராட்சி ஊழியர்களும் வந்துள்ளனர்.
அப்பொழுது அவரது குடிசையில் பல பைகளில் ரூபாய் நோட்டுகளும் நாணயங்களும் குவியல் குவியலாக இருந்துள்ளது. இதனை பார்த்த நகராட்சி ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு, பானங்களை எண்ணியுள்ளனர். அதில் 70 முதல் 80 கிலோ நாணயங்கள் இருந்ததாகவும், மேலும் பல ரூபாய் நோட்டுகளும் இருந்துள்ளது.
30 ஆண்டுகளாக அவர் தர்மம் எடுத்த பணத்தை வீட்டில் சேமித்து வைத்து உள்ளார். அவர் அங்கு தனியாக வசித்து வந்ததால், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அவ்வப்போது அவருக்கு பண உதவி செய்து வந்தது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்த பணத்தை கணக்கிட்டதில் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் அவரிடமிருந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த ரூபாய் நோட்டுகள் பல கிழிந்த நிலையிலும் இருந்துள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…