Union Minister Nirmala Sitharaman speak in Lok sabha [Image source : Sansad TV]
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் 16 நாள் நடைபெற்று பெற்றது. இன்று 17-ஆவது நாளாக தொடங்கி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முழுவதுமாக நிறைவு பெறுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு பிரச்னைகளை எழுப்பி இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் சரிவர நடைபெறாமல் முடங்கியது.
இருப்பினும், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு ஒரு சில மசோதாக்கள் தாக்கல் செய்து நிறைவேற்றியும் வருகிறது. இதில் குறிப்பாக டெல்லி நிர்வாக மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இதுபோன்று பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன.
மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகளின் அடிப்படையில் இன்று 2 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன. தமிழக அரசு விதித்துள்ள தடைக்கு பாதிப்பில்லாத வகையில் மசோதாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…