delhi government school [file image]
டெல்லியின் நரைனா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எரிவாயு கசிவு ஏற்பட்டு மூச்சு திணறல் காரணமாக 28 மாணவர்கள் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களில் இருவருக்கு ஆக்ஸிஜன் ஆதரவு அளிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் உடல்நிலை தேறிவருவதாக கூறப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களில் 19 பேர் ஆர்எம்எல் மருத்துவமனையிலும், 9 பேர் ஆச்சார்யா பிக்ஷுக் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் ஆய்வு செய்து, விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளார். டெல்லி மாநகராட்சி அதிகாரப்பூர்வ அறிக்கையில், அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மேயர் ஷெல்லி ஓபராய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், மாணவர்களை சந்தித்து அவர்கள் நலமாக இருப்பதாக கூறினார். இரண்டு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் தற்போது நலமாக உள்ளனர். குழந்தைகளை அவர்களது வீடுகளுக்கு திரும்ப நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று தெரிவித்தார்.
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…