நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 2ஆம் நாள் விவாதம்..! மக்களவையில் பேசவுள்ள ராகுல் காந்தி..!

Published by
செந்தில்குமார்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். மேலும், நாடாளுமன்ற விதி 267இன் படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர்.

மேற்கண்ட கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்படாததால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர். இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார். இதன் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.

பிறகு இரு அவையும் இன்று காலை மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதோடு, நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்றும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு விவாதம் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவரின் தகுதி நீக்கம் செய்த உத்தரவை திரும்பப் பெற்ற மக்களவைச் செயலகம் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவியை வழங்கியது.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதமானது தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெறவுள்ள நிலையில், இதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசுவார் என்று தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காங்கிரஸின் பேச்சாளர்களாக ராகுல் காந்தி, ரேவந்த் ரெட்டி, ஹெபி ஈடன் ஆகியோர் பேச உள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!

சென்னை : லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூத்த நடிகர் சஞ்சய் தத், ''படத்தில் தனக்கு…

18 minutes ago

”என் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி இருந்தது” – ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு.!

விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். விருதாச்சலத்தில்…

50 minutes ago

Fact Check: பாடகி ஆஷா போஸ்லே மரணம்.? மகன் கூறிய உண்மை தகவல்.!

டெல்லி : ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. நேற்று கூட, பிரபல பாடகி…

1 hour ago

இந்த இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago

INDvsENG : மூன்றாவது போட்டியை பார்க்க விராட் கோலி ஏன் வரவில்லை? தினேஷ் கார்த்தி உடைத்த உண்மை!

லண்டன் : உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்  விராட்…

2 hours ago

’75 வயதானால் வழி விடுங்கள்” …யாரை சொல்கிறார் மோகன் பகவத்?

மகாராஷ்டிரா : மாநிலம் நாக்பூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்) தலைவர் மோகன் பகவத்,…

3 hours ago