மைசூர் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட 3 சிறுத்தைகள்.
இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸானது மனிதர்களை மட்டுமல்லாது விலங்குகளையும் தாக்கி வருகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆன் வான் டைக் சீட்டா மையத்திலிருந்து, மைசூர் பூங்காவிற்கு மூன்று சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் இரண்டு பெண் சிறுத்தைகள் மற்றும் ஒரு ஆண் சிறுத்தை ஆகும்.
இதுகுறித்து அப்பூங்காவின் இயக்குனர் அனில் குல்கர்னி அவர்கள் கூறுகையில், ‘தென் ஆப்பிரிக்காவில் இருந்து மூன்று சிறுத்தைகள், சிங்கப்பூர் வழியாக, இந்தியாவில் உள்ள மைசூர் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறுத்தைகள் உள்ள பூங்காவில் இதுவும் ஒன்றாகும். தற்போது இந்த பூங்காவில் 5 சிறுத்தைகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பூங்காக்களை பார்வையிட அரசு அனுமதி அழைத்தவுடன் இந்த சிறுத்தைகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும், தற்போது உலக அளவில் 7,100 சிறுத்தைகள் உள்ளன என்றும், அவற்றில் பெரும்பாலானவை ஆப்பிரிக்காவில் உள்ளன.’ என்றும் தெரிவித்துள்ளார்.
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…