பணம் மற்றும் நகைக்காக 3 திருமணம் செய்த பெண்ணை காவல்நிலையத்தில் புகாரளித்த இராணுவவீரர்.
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ரேணுகா என்ற பெண், ராணுவத்தில் பணியாற்றும் பிரசாத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தான் பணியாற்றும் லக்னோவிற்கு ரேணுகாவை அனைத்து சென்றுள்ளார். அங்கு பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கி கொடுத்துள்ளார்.
இதனையடுத்து தனது விசாகப்பட்டினம் மாநகராட்சியில் வேலை கிடைத்திருப்பதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டார். அதன்பின் லக்னோவில் இருந்து, அடிக்கடி தொலைபேசி மூலம் ரேணுகாவிடம் பேசி வந்துள்ளார் பிரசாத். இதனையடுத்து, தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, ரூ.45 லட்சம் வரை பிரசாத்திடம் பணம் வாங்கியுள்ளார். இறுதியாக தனது தாயார் இறந்துவிட்டதாக கூறிஉள்ளார்.
இதனையடுத்து, கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, விசாகப்பட்டினம் வந்த பிரசாத்துக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதன்பின் தான் அவருக்கு ரேணுகாவிடம் ஏமாந்தது தெரியவந்தது. இந்நிலையில், இதுகுறித்து ராணுவவீரர் பிரசாத் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ரேணுகாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் அவர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்தது தெரியவந்தது.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…