இங்க பாருங்க ! செகண்ட் ஹேண்ட் கார் வாங்க 3 மாத ஆண் குழந்தை விற்பனை

Published by
Hema

உத்திரபிரதேசத்தில் கார் வாங்க 1.5 லட்சத்திற்கு குழந்தையை விற்ற பெற்றோர்.

உலகெங்கும் கொரோனா பரவி பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் பிணங்களை எறிக்க ஆங்காங்கே மக்கள் வரிசைகட்டி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் செகண்ட் ஹேண்ட் கார் வாங்கவதற்கு தான் பெற்ற பிள்ளையை தொழிலதிபர் ஒருவரிடம் உத்திரபிரதேசத்தை சேர்ந்த தம்பதியினர் விற்றதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் குழந்தையின் தாய்வழி தாத்தா பாட்டி போலீஸ்காரர்களை அணுகி பெற்றோருக்கு எதிராக புகார் அளித்ததையடுத்து, புதிதாகப் பிறந்த 3 மாத குழந்தையை விற்றுவிட்டதாக வியாழக்கிழமை இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

குழந்தையின் தாத்தா பாட்டி பகிர்ந்து கொண்ட தகவல்களின்படி, 3 மாத குழந்தை குர்ஷாஹைகஞ்ச் நகரைச் சேர்ந்த தொழிலதிபருக்கு ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள நான்கு சக்கர வாகனத்திற்காக விற்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். புகாரை ஏற்ற போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்ற சம்பவம் சமீபத்தில் சீனாவிலும் அறங்கேறியுள்ளது, சீனாவின் ஜெஜியாங்கில் ஒரு நபர் சமீபத்தில் தனது இரண்டு வயது மகனை விற்றுள்ளார், பின்னர் அந்த பணத்தை வைத்து வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். தனது 2 வது மனைவியுடன் சண்டையிட்டு குழந்தை பராமரிப்பு சுமையால் பெற்ற மகனை விற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Hema

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

9 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

10 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

10 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

11 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

12 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

14 hours ago