பீகாரில் 3 பெண்களை சூனியக்காரி என கூறி சிறுநீர் குடிக்க வைத்த அவலம்..!

Published by
Sharmi

பீகாரில் சூனியக்காரி என்று மூன்று பெண்களை கூறி இரவு முழுவதும் கட்டி வைத்து துன்புறுத்தி, சிறுநீர் கழிவுகளை குடிக்க வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பீகாரில் உள்ள பர்ணியா மாவட்டத்தில் இருக்கும் மக்களில் சிலர், 3 பெண்களை சூனியக்காரிகள் என்று குற்றம் சாட்டி அவர்களை கயிற்றால் வீட்டில் கட்டி வைத்து துன்புறுத்தியுள்ளனர். மேலும், அவர்களிடம் மனித கழிவுகளை உட்கொள்ள வைத்துள்ளனர். இந்த மூன்று பெண்களில் ஒருவர் சிறுபான்மை இனத்தவர். இந்த சம்பவத்தில் சிக்கிய பெண்களில் ஒருவரது உறவினர் சகோதரரின் மனைவியை மற்ற இரு பெண்கள் சேர்ந்து காண வந்துள்ளனர்.

அந்த பெண்ணுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர்களை சந்திக்க வந்துள்ளனர். அப்போது அங்கிருக்கும் மக்கள் இவர்களை காட்டி இவர்கள் சூனியக்காரிகள் என்று கூறியுள்ளனர். மேலும், 10 முதல் 12 பேர் சேர்ந்து மூவரையும் வீட்டில் கட்டி அடைத்து வைத்துள்ளனர். பின்னர், இவர்கள் மூவரையும் இரவு முழுவதும் தாக்கி, மனித கழிவுகளையும், சிறுநீரையும் குடிக்க வைத்ததாக அந்த பெண்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் சனிக்கிழமையன்று நிகழ்ந்துள்ளது. ஆனால், இவர்கள் 3 பேரும் திங்கள்கிழமையன்று சம்பவம் நிகழ்ந்த மோஹினி ஆதிவாசி டோலா பகுதிக்கு உட்பட்ட கஸ்பா காவல் நிலையத்தில் எழுத்து பூர்வமாக புகார் அளித்துள்ளனர்.

இதனை அறிந்த காவல்துறை அதிகாரி சாந்தன் குமார் தாக்கூர் 11 நபர்கள் மீது சூனிய எதிர்ப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். இதில் இதுவரை 2 பேர் கைதான நிலையில் மற்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களை சூனியக்காரிகள் என்று தாக்கும் நிகழ்வு பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறுகிறது. இதன் காரணமாகவே சூனிய எதிர்ப்பு சட்டம் மற்றும் அபராதம் போன்றவை விதிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

1 hour ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

2 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

3 hours ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

3 hours ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

4 hours ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

4 hours ago