Categories: இந்தியா

48 மணி நேரத்தில் மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் 31 பேர் உயிரிழப்பு.! காங்கிரஸ் கடும் கண்டனம்.!

Published by
கெளதம்

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் உள்ள சங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையில் (நேற்று) 24 மணி நேரத்தில் 12 பிறந்த குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். நேற்றிரவு மேலும் 7 பேர் உயிரிழந்ததையடுத்து (இன்று) 48 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் உயிரிழந்த 31 பேரில் 15 குழந்தைகள் மற்றும் 16 பெரியவர்கள் என்று கூறப்படுகிறது. மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறையால் தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் குறிப்பிட்ட அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் ஷியாம்ராவ் வகோட், மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், மருந்துகள் மற்றும் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு என்பது தவறான குற்றச்சாட்டு. அந்த பேச்சுக்கே இங்கு இடமில்லை, பாம்புக்கடி உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்தும் அந்த சிகிச்சை பலனளிக்காததால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட காரணம் என்று கூறி, இது ஒரு மூன்றாம் நிலை மருத்துவமனை மையம் என்றும் அவர் விளக்கினார்.

70-80 கிமீ சுற்றளவில் உள்ள ஒரே சுகாதார மையமாக இந்த மையம் இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் வருகிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கைவிட சில சமயங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் ‘மருந்துகள் தட்டுப்பாடு’ எனும் குற்றச்சாட்டுகளை டீன் மறுத்துள்ளார்.

தற்போது, அரசு மருத்துவமனையில் நடந்த இந்த உயிரிழப்புகள் குறித்து அம்மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அரசு மீது, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது X தள பக்கத்தில், “இந்த சம்பவம் மிகவும் வேதனையானது. இந்த நோயாளிகள் மருந்து மற்றும் சிகிச்சை இல்லாததால் இறந்ததாக கூறப்படுகிற, இது மிகவும் கவலை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தனது பதிவில் வலிறுத்தியுள்ளார்.

மேலும், காங்கிரஸ் எம்.பி  ராகுல் காந்தி னது X தள பக்கத்தில், மகாராஷ்டரா மாநிலம், நாந்தேட் அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாட்டால் 12 பிறந்த குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ.க அரசு தனது விளம்பரத்திற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கிறது, ஆனால் குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க பணமில்லையா? பாஜகவின் பார்வையில் ஏழைகளின் உயிருக்கு மதிப்பில்லை என்று வன்மையாக கண்டித்து தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Published by
கெளதம்

Recent Posts

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

41 minutes ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

1 hour ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

2 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

3 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

3 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

3 hours ago