[File Image]
உ.பி மாநிலம் பால்லியாவில் வெயில் தாக்கம் காரணமாக 48 மணிநேரத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோடை காலம் முடியும் தருவாயிலும் இன்னும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து தான் காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அரசு, மக்களை பாதுகாப்பாக இருக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருந்தும் சில சமயங்களில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டு விடுகின்றன.
உத்திர பிரதேசத்தில், பல்லியா மாவட்டத்தில் கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 34 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்ததாக, தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயந்த் குமார் நேற்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘ உபியில் வெப்பம் அதிகரித்துள்ளது. செய்திகள் வாயிலாக பல்லியா மாவட்ட மருத்துவமனையில், வியாழக்கிழமை 23 பேரும், வெள்ளிக்கிழமை 11 பேரும் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்ததாக பார்த்தேன். இதுகுறித்து அனைத்து மருத்துவர்களிடமும் பேசினேன். இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என்பது குறிப்பித்தக்கது என்றார்.
அடுத்ததாக, உயிரிழந்தவர்களுக்கு அவர்கள் உயிரிழப்புக்கு முன்னர் வரை தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் பல்லியா மாவட்ட அதிகாரி தெரிவித்தார்.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…