[File Image]
உ.பி மாநிலம் பால்லியாவில் வெயில் தாக்கம் காரணமாக 48 மணிநேரத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோடை காலம் முடியும் தருவாயிலும் இன்னும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து தான் காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அரசு, மக்களை பாதுகாப்பாக இருக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருந்தும் சில சமயங்களில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டு விடுகின்றன.
உத்திர பிரதேசத்தில், பல்லியா மாவட்டத்தில் கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 34 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்ததாக, தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெயந்த் குமார் நேற்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘ உபியில் வெப்பம் அதிகரித்துள்ளது. செய்திகள் வாயிலாக பல்லியா மாவட்ட மருத்துவமனையில், வியாழக்கிழமை 23 பேரும், வெள்ளிக்கிழமை 11 பேரும் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்ததாக பார்த்தேன். இதுகுறித்து அனைத்து மருத்துவர்களிடமும் பேசினேன். இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என்பது குறிப்பித்தக்கது என்றார்.
அடுத்ததாக, உயிரிழந்தவர்களுக்கு அவர்கள் உயிரிழப்புக்கு முன்னர் வரை தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் பல்லியா மாவட்ட அதிகாரி தெரிவித்தார்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…