அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், யுபிஎஸ்சி ஆட்சேர்ப்பு பணிகளை ஒத்திவைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து, நாடே பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், கல்வி இயக்குநரகம், கல்வித் துறை, டெல்லியின் என்.சி.டி ஆகியவற்றில் உள்ள 363 முதன்மை பதவிகளை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு பணியை ஒத்திவைத்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக இருப்பதால், UPSC ஆட்சேர்ப்பு பணிகள் ஒத்திவைக்கப்படுகிறது. ஆட்சேர்ப்பு பணிக்கான திருத்தப்பட்ட தேதிகளை யுபிஎஸ்சி சரியான நேரத்தில் அறிவிக்கும். யூனியன் பொது சேவை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளம் upc.gov.in. மேலும், யுபிஎஸ்சி ஆட்சேர்ப்பு 2021 குறித்த மேலதிக தகவல்களை யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…