அகமதாபாத்தில் உள்ள ஒரு ஜவுளி ஆலையில் கழிவு தொட்டியை சுத்தம் செய்யும்போது ஏற்பட்ட விஷவாயுவை சுவாசித்தால், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலம், அகமதாபாத் மாவட்டத்தில் சிரிபால் குடும்பத்திற்கு சொந்தமான “விஷால் பேப்ரிக்ஸ்” எனும் அருகே ஒரு ஜவுளி தொழிற்சாலையில் ரசாயன கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட நான்கு தொழிலாளர்கள், கழிவு தொட்டியின் உள்ளே விஷ வாயுவை சுவாசித்ததால், மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து அம்மாவட்ட டி.எஸ்.பி. நிதேஷ் பாண்டே கூறுகையில், இரசாயன கழிவு தொட்டியின் உள்ளே விஷ வாயுவை சுவாசித்ததில் தொழிலாளர்கள் நான்கு உயிரிழந்ததாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ரசாயன கழிவுத் தொட்டியை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி, சுயாதீன சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு அகமதாபாத் நகரில் சிரிபால் குழுவைச் சேர்ந்த மற்றொரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…