தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என கோரி டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனு கொடுத்தார்.
அப்போது, தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் கூடுதலாக தமிழகத்தில் 4 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு கடந்த ஆண்டு 14 நகரங்களில் நடத்தப்பட்ட நீட் தேர்வு நடப்பாண்டில் 18 நகரங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய புதிய 4 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவித்ததாக தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…