காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் 5பயங்கரவாதிகள் கொலை!

Published by
Rebekal

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் உள்ள குல்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் பதுங்கிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எனவே அவ்விடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மோதலின்போது முதலில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதற்கு பதில் தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் லக்ஷர் இ தொய்பா பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்.

மேலும் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஹிண்டுவால் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிலும் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள காஷ்மீர் ஐஜிபி விஜயகுமார் அவர்கள், கடந்த புதன்கிழமை மட்டும் காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அவர்களில் லக்ஷர் இ தொய்பா மற்றுமொருவர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும், மற்ற இரண்டு பயங்கரவாதிகள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் பிற இடங்களில் தொடர்ந்து பயங்கரவாதிகள் குறித்த விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

“இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கினோம்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பிரதமர் விளக்கம்.!

“இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கினோம்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பிரதமர் விளக்கம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…

2 minutes ago

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…

1 hour ago

”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…

2 hours ago

அதிபர் டிரம்பிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்.!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…

2 hours ago

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

3 hours ago

”பிரதமரின் இமேஜை காக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது” – ராகுல் காந்தி ஆவேசம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…

3 hours ago