50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி, உட்பட பல கட்டுப்பாடுகளை விதித்த கர்நாடக அரசு!

Published by
Surya

கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், அம்மாநில அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்தியா மமுழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இதன்காரணமாக கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாநிலங்களும் சூழலுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்தவகையில், கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் அம்மாநில அரசு, புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, 6 முதல் 9 ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் பாடங்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடரும் எனவும், வருகைப் பதிவு கட்டாயமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீச்சல் குளங்கள், ஜிம், உள்ளிட்டவை மூடப்படுவதாகவும், வழிபாட்டுத் தலங்களில் எந்தவித கூட்டமும் அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, எந்தவித போராட்டங்கள், பேரணிகளுக்கும் அனுமதி கிடையாது எனவும், திரையரங்குகள், உணவகங்கள், பார்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

திரையரங்கில் 50 சதவீத இருக்கைகளுக்கான அனுமதி, வரும் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் 20-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Surya

Recent Posts

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

25 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago