50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி, உட்பட பல கட்டுப்பாடுகளை விதித்த கர்நாடக அரசு!

Published by
Surya

கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், அம்மாநில அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்தியா மமுழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இதன்காரணமாக கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாநிலங்களும் சூழலுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்தவகையில், கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் அம்மாநில அரசு, புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, 6 முதல் 9 ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் பாடங்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடரும் எனவும், வருகைப் பதிவு கட்டாயமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீச்சல் குளங்கள், ஜிம், உள்ளிட்டவை மூடப்படுவதாகவும், வழிபாட்டுத் தலங்களில் எந்தவித கூட்டமும் அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, எந்தவித போராட்டங்கள், பேரணிகளுக்கும் அனுமதி கிடையாது எனவும், திரையரங்குகள், உணவகங்கள், பார்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

திரையரங்கில் 50 சதவீத இருக்கைகளுக்கான அனுமதி, வரும் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வரும் 20-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Surya

Recent Posts

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

9 minutes ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

35 minutes ago

“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…

38 minutes ago

சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…

2 hours ago

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…

2 hours ago

“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!

வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…

2 hours ago